Sunday, October 19, 2014

ஜெயா லலிதாவின் சாதனைகளை  யாருமே முறியடிக்க முடியாது
1. முதல் அமைச்சர் பதவியிலிருந்தும்  முதன் முதலில்  இந்தியாவிலே தோற்கடிக்க பட்டவர்
2. கட்சிக்காக எந்த தியாகமும் செய்யாமல் புரட்சித் தலைவி என்ற பட்டம் பெற்றவர்  என்ன புரட்சி செய்தார் என்பது  இதுவரை யாருக்குமே விளங்காத  ரகசியம்
3. டான்சி ஊழலுக்காக  முதன் முதலில் சிறை சென்ற முன்னாள் முதல்வர்
4.2006 ல்  அன்றைய அமைச்சர்  கோ,சி.மணி  குற்றம் சாட்ட பெற்ற  ஜெயேந்திரை  சந்தித்ததுப் பற்றி ஒரு அமைச்சர் எப்படி ஒரு குற்றவாளியை  சந்திக்கலாம் என விமர்சனம் செய்தவர்  , ஆனால் எல்லா  தமிழக அமைச்சர்கள்  ஒரு குற்றவாளியான  அவரை எவ்வாறு சந்திக்கின்றார்கள்  என்பது புரியாத புதிர்

5. யாரும்  நீதி  துறை ,அல்லது நீதிபதியை  விமர்சிக்க வேண்டாம் என்று இன்று அறிக்கைவிடும் அவர்  கைதான  உடனே என் இந்த அறிக்கை  விட வில்லை .

6. குற்றம் சாட்டப் பெற்றுள்ள அவருக்கு  நிபந்தனை  ஜாமீன் தன  அளிக்கப் பட்டுள்ளது  , இன்னும் அவர் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளிதான்  ஆனால் நிரபராதி என்று விடுதலை செய்யப் பட்டது போல்  என் இந்த ஆர்பாட்டம்

7. அ.தி.மு.காவிற்கும்  பாரதிய ஜனதா கட்சிக்கும் உள்ள சுமூக உறவு அனைவரும் அறிந்தததே .நீதித் துறையில் .பி.ஜே.பியின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம்  சுப்ரீம் கோர்ட் . ஜாமீன் வழங்கியதில் எழுந்துள்ளது . இதன்   எதிரொலி ஜெயாவின் மேல் முறையீட்டில்
ஒலிக்க  வாய்ப்பு  உள்ளது  . சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியதின் மூலம்  ஒரு குற்றவாளிக்கு  நிழல்  அரசாங்கம் நடத்த சந்தர்ப்பம்  அளித்ததாக தோன்றுகின்றது   

No comments: